Skip to content

பாஜக கூட்டணி ஏற்பாடு செய்தவர் சவுமியா- ராமதாஸ் குற்றச்சாட்டு

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்   இன்று தைலாபுரத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது  அதிமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என  விரும்பினேன். பாஜக கூட்டணிக்கு ஏற்பாடு செய்தவர் சவுமியா.  பாஜகவுடன் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் , எனக்கு நீங்கள் தான் கொள்ளி வைக்க வேண்டியது வரும் என மிரட்டினார் அன்புமணி.  பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதிக்க வைக்க என் கால்களை பிடித்தனர் அன்புமணியும், சவுமியாவும்.   அன்புமணி குறித்து நான் சொன்னதெல்லாம் சில  சாம்பிள்  தான்.  சவுமியா ஏற்பாட்டில் தான் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அண்ணாமலை வந்தார்.  மாநில இளைஞர் அணி தலைவராக முகுந்தனே உள்ளார்.

பொதுக்குழுவில் நான் பேசியதற்கு எதிர்வினை ஆற்றாமல் ஒரு நிமிடம் பொறுமை காத்திருக்கலாம்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று பாமகவுக்கு 3 எம்.பிக்கள் கிடைத்திருப்பார்கள்.

இவ்வாறு  ராமதாஸ் கூறினார். பேட்டியின்போது அவ்வப்போது ராமதாஸ் கண்கலங்கினார்.

error: Content is protected !!