Skip to content

நடிகர் கிருஷ்ணா வீட்டில் சோதனை… மாத்திரைகள் ஆய்வுக்கு எடுத்து சென்ற போலீஸ்…

  • by Authour

போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து , நடிகர் கிருஷ்ணாவும் விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார்.  இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பி, அவரை  தொடர்புகொள்ள முயற்சித்த நிலையில் அவர் கேரளாவில் படப்பிடிப்பில் இருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பிறகு அவரது செல்ஃபோன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டது.  இதனால் கேரளாவில் தலைமறைவாகியுள்ளதாக தெரிவித்த போலீஸார்,  அவரை பிடித்து வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

அதற்குள்ளாக சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில்  நேற்று காலை  நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜரானார். அவரிடம் விடிய விடிய 15 மணி நேரத்திற்கும் மேலாக போலீஸார்  துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.  இருப்பினும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத்,  ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்கள் உடனான இவரது தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார்,  திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேற்றிரவு 11 மணி வரை கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை முதல் மீண்டும் விசாரணை தொடங்கியிருக்கிறது. மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தனக்கு உடல்நல பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும்  வாயு கோளாறு,  அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உள்ளிட்ட தனது உடல்நிலை  பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும்  கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்திருக்கிறார். உயர் ரக போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.

error: Content is protected !!