Skip to content

தமிழ்நாடு போலீசுக்கு ஆள் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 3,665 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இதில் 2,833 இரண்டாம்  நிலை காவலர்கள், 180 சிறைக்காவலர்கள், 631 தீயணைப்பு வீரர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,200 – 67,100/- வழங்கப்படும்.

தேர்வர்கள் நாளை முதல் வரும் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வு வரும் நவம்பர் மாதம் 9 ம் தேதி நடைபெறுகிறது. தேர்வர்கள் தேர்வு அறிவிப்பினை https://www.tnusrb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!