Skip to content

பொங்கல் பண்டிகை ரயிலில் முன்பதிவு….. சிறிது நேரத்தில் டிக்கெட் காலி

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை  தை மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. 2024 ஜனவரி 14-ம் தேதி (ஞாயிறு) போகி பண்டிகை தொடங்கி, ஜனவரி 15-ம் தேதி பொங்கல், 16-ம் தேதி மாட்டுப்பொங்கல் 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.  பொங்கல் பண்டிகையையொட்டி இன்று (புதன்கிழமை) ரெயில்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளம் வாயிலாகவும், டிக்கெட் முன்பதிவு மையங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரெயில்வே அறிவித்தது.

இன்று முன்பதிவு செய்வோர் ஜனவரி 11 ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலையிலேயே முன்பதிவு  தொடங்கியது. சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும்  முன்பதிவு செய்யப்பட்டது.

ஜனவரி12-ம் தேதி சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.  டிக்கெட் முன்பதிவு விவரம்:

* செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 13ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 16-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 14-ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 17-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 15ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

* செப்டம்பர் 18-ம் தேதி முன்பதிவு செய்வோர் ஜனவரி 16ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம்.

செப்டம்பர் 19-ம் தேதி முன்பதிவு செய்வோர், ஜனவரி 17ம் தேதி பயணம் செய்து கொள்ளலாம். என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!