திருச்சி இபி ரோடு லூர்துசாமி பூங்கா அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த பொழுது கமல நேரு பகுதியை சேர்ந்த காளிமுத்து (வயது 19) என்ற வாலிபர்போதை மாத்திரை விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட காளிமுத்துவிடமிருந்து போதை மாத்திரைகள் ஊசிகள் சலீம் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

