திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை வழியாக நாட்றம்பள்ளி செல்லும் பிரதான சாலையில் ஒரு நாளைக்கு சுமார் 20,000 மேற்பட்டோர் பயணித்து வருகின்றனர். இந்த வழியாக நாட்றம்பள்ளி, வெலக்கல்நத்தம், குப்பம், உள்ளிட்ட சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டி உள்ளது. இந்நிலையில் டி.வீரபள்ளி பகுதியில் உள்ள பிரதான சாலையில் மின்கம்பி ஒன்று அறுந்து விழுந்துள்ளது. இதில் ஒரு பக்கம்
சாலையிலும் மற்றொரு பக்கம் புளிய மரத்திலும் கம்பிகள் விழுந்துள்ளன. மேலும் வழியாக பயணிக்கும் மின்கம்பி அறுந்து விழுந்தது அறியாமல் வாகன ஓட்டிகள் கம்பியின் அருகே கம்பியின் அருகே வண்டியை ஓட்டி வருகின்றனர். இதன் காரணமாக மின் கம்பியை மிதித்தால் மிகப்பெரிய அசம்பாவிதம் நடைபெறும் எனவே மின்துறை அதிகாரிகள் உடனடியாக அருந்து விழுந்து உள்ள மின்கம்பியை சரி செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை மின் பகிர்மான அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.