Skip to content

பாலியல் வழக்கில் சாகும்வரை சிறை: சிறையில் கதறி அழுகிறாா் தேவகவுடா பேரன்

  • by Authour

 வீட்டு பணிப்​பெண்ணை பாலியல் வன்​கொடுமை செய்த வழக்​கில் முன்​னாள் பிரதமர் தேவக​வு​டா​வின் பேரனும், கர்​நாடக முன்​னாள் எம்​.பி.​யு​மான பிரஜ்வல் ரேவண்​ணாவுக்கு (34) சாகும் வரை சிறை தண்​டனையும், ரூ.10 லட்சம் அபராதமும்  விதிக்​கப்​பட்ட நிலை​யில்,   அவர்  பெங்களூரு பரப்பன அக்ரகார  மத்தியில் சிறையில் அடைக்கப்பட்டார்.  ஏற்கனவே அவர் அந்த  சிறையில் இருந்தபோதிலும்,  சாகும்வரை ஆயுள் சிறை தண்டனைக்கு பிறகு  அவர்  சிறைக்கு கொண்டு வரப்பட்டபோது  மிகவும்  அழுத புலம்பியபடி இருந்தார். அவருக்கு கைதி எண் 15528 வழங்​கப்​பட்​டுள்​ளது.

கடந்த 2-ம் தேதி தீர்ப்பு வழங்​கப்​பட்ட நிலை​யில், தண்​டனைக்​கான முதல் இரவை அவர் சிறை​யில் கழித்​தார். கண்​ணீர் விட்டு அழுததுடன், மிகுந்த மன உளைச்​சலுடன் காணப்​பட்​டார். அவரது உடல்​நிலை சீராக இருப்​பதை உறுதி செய்​வதற்​காக சிறை மருத்​து​வர்​கள் அன்று இரவு அவரது உடல்​நிலையை பரிசோ​தித்​தனர். அப்போது, தனது வேதனை​களை மருத்துவர்களிடம் அவர் வெளிப்​படுத்​தி​யுள்​ளார். இந்த தண்​டனையை எதிர்த்து உயர் நீதி​மன்​றத்தை அணுகி​யுள்​ள​தாக​வும் பிரஜ்வல் ரேவண்ணா கூறி​யுள்​ளார்.
முன்​னாள் எம்​.பி. என்​ப​தால் தற்​போது அவர் உயர் பாது​காப்பு அறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார். மேலும், அவர் கைதிகளுக்கு உரிய ஆடைகளை மட்​டுமே அணிய வேண்​டும். நேற்று காலை அவருக்கு அதி​காரப்​பூர்​வ​மாக கைதி எண் 15528 ஒதுக்​கப்​பட்​டது.  இந்த தகவல்களை அவர்  சிறைத் துறை அதி​காரி​கள்​ தெரி​வித்​தனர்​.
error: Content is protected !!