Skip to content

18ம் தேதி ஜனாதிபதி முர்மு, மதுரை, கோவை வருகிறார்

 இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, வருகிற 18-ந் தேதி  மதுரை வருகிறார். அன்றைய தினம் மகா சிவராத்திரி  என்பதால் அவர்  மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவதாக   தகவல் வெளியாகி உள்ளது.

அன்றைய தினம் அவர்டில்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மதுரை விமானநிலையம் வருகிறார். மதியம் 12 மணிக்கு மேல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார். பின்னர் விமானநிலையம் சென்று கோவை செல்கிறார். அங்கு ஈஷா மையத்தில் நடக்கும் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக தெரிய வருகிறது.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது,

ஜனாதிபதி வருவதாக தகவல் வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். ஆனால் அவர் வருவது குறித்த தகவல் ஓரிரு தினங்களுக்கு முன்புதான் உறுதி செய்யப்படும். ஆனாலும் நாங்கள் இப்போது இருந்தே பாதுகாப்பு முன்ஏற்பாடுகளை தொடங்கி உள்ளோம்” என்றார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கடந்த 2021-ம் ஆண்டு பிரதமர் மோடி வருகை தந்தார். தற்போது, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது. அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றபின் மதுரைக்கு முதன்முறையாக வருவதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!