சென்னை மெட்ரோ ரயில் சேவையின் அடுத்த விரிவாக்கமான பூந்தமல்லி-போரூர் தடத்தில் ரயில் சேவை தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்த திட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் ரூ.26,000 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்த தடம் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

