Skip to content

செய்தி மக்கள் தொடர்புத்துறை PROக்கள் பதவி உயர்வு

தமிழ்நாட்டின் பல்வேறு  மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை  அலுவலர்கள் பதவி உயர்வு பெற்று  புதிய  பொறுப்புகளில் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:

திருநெல்வேலி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.ஜெய அருள்பதி திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழகத்தில் உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

பெரம்பலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .க.பாவேந்தன் பதவி உயர்வு பெற்று  புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக உதவி இயக்குநராக  நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழரசு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.உதயா கதிரவன் இப்பணியிடத்திலேயே உதவி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

தலைமை இடத்து செய்தி வெளியிட்டு பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பி.முத்தமிழ் செல்வன்  பதவி உயர்வு  பெற்று தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிகை நல வாரியத்தில் உதவி இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
.சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சுவாமிநாதன்  பதவி உயர்வு பெற்று தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் உதவி இயக்குநராக  நியமிக்கப்படுகிறார்.

தமிழரசு அலுவலக உதவி இயக்குநர் கே.ஏ. முகமது ரசூல் தலைமையிடத்து நினைவக உதவி இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
தமிழ்நாடு திரைப்பட தொழிலாளர் மற்றும் பத்திரிக்கையாளர் நல வாரிய உதவி இயக்குநர் எஸ்.தீபா தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை உதவி இயக்குநராக பணியிட மாற்றம்.

தலைமையிடத்து பொருட்காட்சி பிரிவு செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .அ.பாரதி தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
.இந்து சமய அறநிலைத்துறை உதவி இயக்குநர் R.நடராஜன் சென்னை மெட்ரோ limited துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உதவி இயக்குநர் P.கலைநேசன்  பதவி உயர்வு பெற்று சென்னை எழிலகம் வருவாய்த்துறை நிர்வாக அலுவலகத்தில் துணை இயக்குனராக பதவி  ஏற்கிறார்.

error: Content is protected !!