Skip to content

பொதுத்தேர்வு அட்டவணை வெளியாகும் தேதி அறிவிப்பு

நவம்பர் 4ஆம் தேதி பள்ளிக் கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை/ தொடக்க கல்வி/ தனியார் பள்ளிகள்) ஆய்வுக்கூட்டம் நடக்க உள்ளது. சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு இந்த ஆய்வுக் கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், 2025- 26ஆம் கல்வி ஆண்டுக்கான 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபரில் வெளியாகும் என ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தார். எனினும் அட்டவணை தயாரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால், நவம்பர் முதல் வாரத்தில் இந்த தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (அக்டோபர் 25) செய்தியாளர்கள் சந்திப்பில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வரும் நவம்பர் 4-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!