Skip to content

புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை

புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டி
மாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்
வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் த.சந்திரசேகரன், தவ.பாஞ்சாலன், பெ.ராஜேஸ்வரி, மதியழகன், கவிவேந்தன், தெய்வானை ,ராஜேஷ்,புல்வயல்சுந்தர்ராஜன், பாரி,சுமோபாலு,வீ.சித்ரா,பூங்குடிமுருகேசன், உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

error: Content is protected !!