புதுக்கோட்டை நகரில் மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் நீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து வந்து வழிபட்டனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அருள் பிரசாதம் வழங்கப்பட்டது ஆலயத்தில் தைப்பூச திருவிழாசிறப்பு வழிபாடினை விழா கமிட்டியாளர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

