புதுக்கோட்டை மாவட்டம் அ.திமுக பொருளாளரும், மாவட்ட அ.திமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவருமான வாண்டா கோட்டை வி.சி.ராமையா இன்று காலை வீட்டின் அருகே நடந்த விபத்தில் உயிருக்கு போராடிய அவரை புதுக்கோட்டை அரசு
மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக வல்லத்திராகோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

