Skip to content

மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிய புதுகை கலெக்டர்…

  • by Authour
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கினார்.உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்தாப்ரசூல் , மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித்துணை ஆட்சியர்( சமூக பாதுகாப்பு திட்டம்) அ.ஷோபா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர். மேலும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின்சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்த தெருமுனை விழிப்புணர்வு பிரசார நடமாடும் வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் , மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்க. பிரேமலதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
error: Content is protected !!