Skip to content

புதுகை தேர்வு மையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

தமிழ்நாட்டில் இன்று  பிளஸ்2 தேர்வு  தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வு நடந்தது.  தேர்வில்  முறைகேடுகளை தடுக்க  பல்வேறு   பறக்கும்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலும் இந்த தேர்வு நடந்து வருகிறது.  புதுக்கோட்டை பிரகதாம்பாள்  அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ள தேர்வு மையத்துக்கு இன்று காலை கலெக்டர்  அருணா  சென்று  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அவருடன் கல்வித்துறை அதிகாரிகளும்  சென்றனர்.

error: Content is protected !!