தமிழ்நாடு முழுவதும் 1000 முதல்வர் மருந்தகங்கள் இன்று தொடங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களில் காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி புதுக்கோட்டை மேலராஜ வீதியில்முதல்வர் மருந்தகம்திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில்,
சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா ஆகியோர் குத்துவிளக்கேற்றி முதல்வர் மருந்தகத்தை துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் துணைமேயர்எம்.லியாகத்தலி, மாநகர திமுக அவைத்தலைவர் அ.ரெத்தினம், வடக்கு மாவட்ட திமுக துணைசெயலாளர்
மதியழகன் ,வட்ட செயலாளர் ஆர்.எம்.சத்யா, ஆஷிப்,கண்மணிசுப்பு, இளங்கோ , குமார் ,செல்லப்பன், சுப்பிரமணியன்,
கைக்குறிச்சிபழனியப்பன்,மாநகராட்சி உறுப்பினர் மதியழகன்,கவி வேந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
