புது்கோட்டை போஸ் நகரை சேர்ந்தவர் தினேஷ்(26). இன்று காலை இவரும், நண்பர்கள் சிலரும் கீழ 4ம் வீதி அடுத்த புதுக்குளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த நண்பர்கள், தினேசை சரமாரி வெட்டி உள்ளனர். இதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார். டவுன் போலீசார், தினேசின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
