கடந்த 14. 8.2025 சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸில் நஸ்ரின் ஜகன் என்ற பெண்மணி பயணம் செய்தார். புதுக்கோட்டையில் இறங்கும்போது தனது கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போனது. இதனை தொடர்ந்து போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் தலைமை காவலர் கணேசன் , ராமேஸ்வரம் இருப்பு பாதையை தொடர்புகொண்டு அவர்கள் பயணித்த பெட்டியை சோதனை செய்ய தங்கச்செயின் கிடைத்தது. இதனை தொடர்ந்து திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு கொடுத்து அனுப்பி இன்று நஸ்ரின் ஜெகனிடம் அடையாளம் காண்பித்ததின் பேரில் அவரிடம் இன்று ஒப்படைத்தனர்.
ரயிலில் தவறவிட்ட தங்க செயினை உரியவரிடம் மீட்டு தந்த ரயில்வே போலீசார்…
- by Authour
