Skip to content

திருச்சியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதிக்கு வரவேற்பு

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தியின் 32ம்ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கர்நாடகாவில் இருந்து ஶ்ரீபெரும்புதூர் வரை ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை ராஜீவ் காந்திஜோதி யாத்திரை கமிட்டி மற்றும் மறைந்த பெங்களூர் பிரகாசம் குழுவினர் கமிட்டி இயக்குனர் துரைவேலு தலைமையில் பல்வேறு மாவட்டங்கள் வழியாக ஸ்ரீபெரும்புதூருக்கு கொண்டு  வருகிறார்கள்.

இந்த ஜோதி இன்று  திருச்சி வந்தது.   திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவ சிலைக்கு
திருச்சி மாவட்ட  காங்கிரஸ் தலைவர் ஜவகர் தலைமையில் கட்சியினர்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர்.

பின்னர் அங்கிருந்து ராஜீவ் காந்தி நினைவு ஜோதி புறப்பட்டு பெரம்பலூர், உளுந்தூர்பேட்டை வழியாக பாண்டிச்சேரி செல்கிறது. அங்கிருந்து  21ம் தேதி தொடர்ந்து 21ம் தேதி  ஶ்ரீபெரும்புதூர் வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!