தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு திமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டு 6 ஆண்டுகள் பூர்த்தியான மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட மேட்டூர் சந்திரசசேகர், பாமக அன்புமணி ஆகியோரின் பதவிகாலம் வரும் ஜூலை 24ல் முடிவடைகிறது.
இந்த நிலையில் இந்த 6 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் வரும் ஜூன் 19ல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 2 ம் தேதி தொடங்குகிறது. 9ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள். போட்டி இருந்தால் 19ம் தேதி தேர்தல் நடக்கும். 6 பேர் மட்டும் நிறுத்தப்பட்டு அவர்களது மனு ஏற்கப்பட்டால் அவர்கள் ஜூன் 19ல் எம்.பிக்களாக அறிவிக்கப்படுவார்கள்.
இந்த தேர்தலில், வழக்கம் போல திமுக 4 இடங்களில் வெற்றி பெறும். இந்த முறை அதிமுக 2 இடங்களில் வெற்றி பெறுமா என்பது அது நிறுத்த இருக்கும் வேட்பாளர்களை பொறுத்து அமையும். ஒரு எம்.பி. வெற்றி பெற வேண்டுமானால் 34 எம்.எல்.ஏக்கள் ஓட்டு போட வேண்டும்.
மேலும் அதிமுக யாரை நிறுத்தப்போகிறது. அதன் மூலம் அதிக கூட்டணியில் ஏதேனும் அதிரடிகள் நடக்குமா என்ற அரசியல் பரபரப்பும் ஏற்பட்டு உள்ளது.
திமுக கூட்டணியில் கமல் ஒரு எம்.பியாகிறார். அதிமுக கூட்டணியில், எடப்பாடி பழனிசாமியின் மகன் ஒரு இடத்துக்கு நிறுத்தப்படலாம் என தெரிகிறது. மற்றொரு இடம் யாருக்கு என்பது கடும் எதிர்பார்ப்பில் உள்ளது. தேமுதிக ஒரு சீட் கேட்கிறது. பாமகவும் சீட் கேட்கிறது. பாஜகவும் கேட்கிறது. யாருக்கு கிடைக்கும் என்பது இன்னும் சில தினங்களில் தெரியவரும்.
