சிவகாசி சிறு குளம் கண்மாய் பகுதியில் இன்று காலை அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மூலிகைச்செடிகளை பறிக்க சென்றுள்ளனர். அப்போது பெரிய வடிவிலான நட்சத்திர ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்ததை பார்த்த அந்த இளைஞர்கள் நட்சத்திர ஆமையை பத்திரமாக மீட்டு அப்பகுதி மாமன்ற உறுப்பினர் மூலம் சிவகாசி நகர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
கண்மாயிலிருந்து மீட்கப்பட்ட நட்சத்திர ஆமையின் ஓட்டில் இருந்த அழகான மற்றும் வினோதமான நட்சத்திர வடிவிலான கோலங்களைக் கண்டு பொதுமக்கள் வியப்படைந்தனர். இதையடுத்து அரிய வகை நட்சத்திர ஆமையை காவல்துறையினர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அரிய வகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்ட சிறுகுளம் கண்மாயில் மேலும் இதேபோல் நட்சத்திர ஆமைகள் இருக்கலாம் என்பதால் அங்கு வனத்துறை ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

