Skip to content

ஐபிஎல்: எளிதில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த ஆர்சிபி

ஐபிஎல் தொடரில்  பிளே ஆஃப் சுற்​றின் முதல் தகுதி சுற்று ஆட்​டம் முல்லான்பூரில் நேற்று நடந்தது.  பஞ்​சாப் கிங்ஸ் – ஆர்​சிபி அணி​கள் மோதின. டாஸ் வென்ற ஆர்​சிபி  கேப்​டன் ரஜத் பட்​டி​தார் பீல்​டிங்கை தேர்வு செய்​தார். அந்த அணி​யில் நூவன் துஷாரா நீக்​கப்​பட்டு ஜோஷ் ஹேசில்​வுட் சேர்க்​கப்​பட்​டார். பஞ்​சாப் அணி​யில் ஒரே ஒரு மாற்​றம் இருந்​தது. மார்கோ யான்​சனுக்கு பதிலாக அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் சேர்க்​கப்​பட்டிருந்தார்.
கேப்​டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 ரன்​களில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை  அடிக்க முயன்ற போது விக்​கெட் கீப்​பரிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஜோஷ் இங்​லிஷ் 4 ரன்​கள் எடுத்த நிலை​யில் ஜோஷ் ஹேசில்​வுட் பந்தை டீப் ஃபைன் லெக் திசை​யில் விளாசிய போது புவனேஷ்வர் குமாரிடம் கேட்ச் ஆனார். இதைத் தொடர்ந்து களமிறங்​கிய நேஹல் வதேரா 8 ரன்​களில் யாஷ் தயாள் பந்​தில் ஸ்டெம்​பு​கள் சிதற நடையை கட்​டி​னார்.
இதன் பின்​னர் சஷாங் சிங் 3 ரன்​களில் சுயாஷ் சர்மா பந்​தில் போல்​டா​னார். சற்று தாக்​குப்​பிடித்து விளை​யாடிய மார்​கஸ் ஸ்டா​யினிஸ் 17 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், 2 சிக்​ஸர்​களு​டன் 26 ரன்​கள் விளாசிய நிலை​யில் சுயாஷ் சர்மா பந்​தில் ஸ்டெம்பை பறி​கொடுத்​தார். அறி​முக வீர​ராக களமிறங்​கிய முஷிர் கானை ரன் ஏதும் எடுக்​காத நிலை​யில் எல்​பிடபிள்யூ முறை​யில் பெவிலியனுக்கு திருப்​பி​னார் சுயாஷ் சர்​மா. இதைத் தொடர்ந்து ஹர்​பிரீத் பிரார் 4 ரன்​களில் ரோமாரியோ ஷெப்​பர்டு பந்​தில் போல்​டா​னார். மட்​டையை சுழற்ற முயன்ற அஸ்​மதுல்லா ஓமர்​ஸாய் 12 பந்​துகளில், ஒரு பவுண்​டரி, ஒரு சிக்​ஸருடன் 18 ரன்​கள் எடுத்த நிலை​யில் கடைசி வீர​ராக ஜோஷ் ஹேசில்​வுட் பந்​தில் விக்​கெட்​கீப்​பரிடம் பிடி​கொடுத்து வெளி​யேற பஞ்​சாப் கிங்ஸ் அணி 14.1 ஓவர்​களில் 101 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. ஆர்​சிபி அணி தரப்​பில் சுயாஷ் சர்​மா, ஜோஷ் ஹேசில்​வுட் ஆகியோர் தலா 3 விக்​கெட்​களை​யும், யாஷ் தயாள் 2 விக்​கெட்​களை​யும் வீழ்த்​தினர். புவனேஷ்வர் குமார், ரோமாரியோ ஷெப்​பர்டு ஆகியோர் தலா ஒரு விக்​கெட் கைப்​பற்​றினர். 102 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த ஆர்​சிபி 10 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 106 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. பில் சால்ட் 27 பந்​துகளில், 6 பவுண்​டரி​கள், 3 சிக்​ஸர்​களு​டன் 56 ரன்​கள் விளாசி​னார். ரஜத் பட்​டி​தார் 8 பந்​துகளில், ஒரு சிக்​ஸர், ஒரு பவுண்​டரி​யுடன் 15 ரன்​களும் சேர்த்​தார்.
முன்​ன​தாக விராட் கோலி 12 பந்​துகளில், 2 பவுண்​டரி​களு​டன் 12 ரன்​கள் எடுத்த நிலை​யில் கைல் ஜேமிசன் பந்​தி​லும், மயங்க் அகர்​வால் 13 பந்​துகளில், 2 பவுண்​டரி​கள், ஒரு சிக்​ஸருடன் 19 ரன்​கள் எடுத்த நிலை​யில் முஷிர் கான் பந்​தி​லும் ஆட்​ட​மிழந்​தனர். 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ஆர்​சிபி அணி இறு​திப் போட்​டிக்கு முன்​னேறியது. அந்த அணி 2016-ம் ஆண்​டுக்​கு பின்​னர்​ தற்​போது​தான்​ இறு​திப்​ போட்​டி​யில்​ கால்​பதித்​துள்​ளது.இதுவரை ஆர்சிபி 4 முறை இறுதிப்போட்டிக்கு சென்றபோதிலும், இறுதிப்போட்டியில் வென்றதில்லை என்ற குறை உள்ளது. இந்த வருடம் அந்த குறை தீரும் என  ரசிகர்கள்  விருப்பம் தெரிவித்து  உள்ளனர். இன்று மாலை அதே  முல்லான்பூர் மைதானத்தில் நடைபெறும்  போட்டியில் மும்பை,  குஜராத் அணிகள் மோதுகின்றன.  இதில் வெற்றி பெறும் அணி,  பஞ்சாபுடன்   1ம் தேதி   அகமதாபாத்தில் மோதும்.  அந்த போட்டியில்  வெல்லும் அணி  3ம் தேதி இறுதிப்போட்டியில்  ஆர்சிபியுடன்  மோதும்.
error: Content is protected !!