Skip to content

திருச்சியில் குதிரை பந்தயத்தில் தோல்வி… பந்தய வீரரை கொன்ற 2 பேர் குண்டாசில் கைது….

  • by Authour

திருச்சியில் கடந்த 26.05.23-ந்தேதி உறையூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டக்கர் ரோட்டில் உள்ள டீ கடை அருகே குதிரை ரேக்ளா பந்தயத்தில் ஏற்பட்ட தோல்வியால் உண்டான முன் விரோதத்தின் காரணமாக குதிரை பந்தய வீரர் ஒருவரை ஆபாசமாக திட்டியும், அருவாள் மற்றும் கத்தியால் வெட்டி கொலை செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் பாலக்கரை எடத்தெருவை சேர்ந்த விஜி 23/23, த.பெ.ஆறுமுகம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம், பூதலுரைச் சேர்ந்த அபிஷேக் 22/23, த.பெ.நித்யானந்தம் ஆகியோர் உட்பட ஆறு நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜி மற்றும் அபிஷேக் ஆகியோர்களின் கொலை குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு உறையூர் காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, மேற்படி எதிரிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் உள்ள விஜி மற்றும் அபிஷேக் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ஆணையினை சார்வு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும், திருச்சி மாநகரில் இதுபோன்ற பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்தியபிரியா கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!