மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா எலந்தங்குடி பரக்கத் தெருவை சேர்ந்த காசிம் மகன் முபின் (14) எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவன் கடந்த 31 ஆம் தேதி வயலில் விளையாடிக் கொண்டிருந்தபோது இன வகை தெரியாத விஷ பூச்சி கடித்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழப்பு. மாணவனுக்கு முறையாக சிகிச்சை அளிக்க காலதாமதப் படுத்தியதாலும் மேல் சிகிச்சைக்கு உரிய நேரத்தில் பரிந்துரைக்கவில்லை என்றும் உயிரிழந்த மாணவனுக்கு உரிய நீதி வழங்க கோரி உறவினர்கள் பொதுமக்கள் மயிலாடுதுறை அரசும் மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம். தொடர்ந்து கும்பகோணம் சாலையில் மறியல் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது.
