Skip to content

தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம்…மீன்துறை எச்சரிக்கை

தஞ்சை கடற் பகுதியில் கடல் சீற்றம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை கடலில் அதிவேக காற்று வீச கூடும் அதனால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லக்கூடாது என்று மீன் துறை எச்சரிக்கை கொடுத்ததன் பேரில் தஞ்சை கடற்பகுதி அதிராம்பட்டினம் மல்லிப்பட்டினம் சேதுபா சத்திரம் மற்றும் கட்டுமாவடி வரை உள்ள கடல் பகுதி மீன்பிடி துறைமுக பகுதியில் இருந்து 2000 பைபர் படகுகளும் அதில் செல்லும் மீனவர்களும் 100 விசைப்படகுகளும் அதில் செல்லும் மீனவர்களும் மொத்தம் மூன்று ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை இது குறித்து மாநில விசைப்படகு பேரவை பொதுச் செயலாளர் தாஜுதீன் கூறுகையில் விசைப்படகு 61 நாட்கள் மீன் இனப்பெருக்கம் காலம் முடிந்து செல்ல உள்ள நிலையில் கடலில் பலத்த காற்று வீச கூடம் என்று மீன் துறை எங்களுக்கு டோக்கன் வழங்கவில்லை அதனால் தஞ்சை புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலிருந்து விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்று கூறினார்

error: Content is protected !!