Skip to content

திருச்சி அருகே துப்பாக்கி முனையில் ரவுடிகள் கைது… மனைவிகள் கைகுழந்தையுடன் முற்றுகை

பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியை சேர்ந்தவன் கிருத்திகை வாசன்(27), மற்றும் முசிறி அருகே உள்ள தொட்டியத்தை சேர்ந்தவர் சுபாஷ்(27). கூட்டாளிகளான இவர்கள் இருவர் மீதும் கொலை, கொள்ளை, வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராகவில்லை என தெரிகிறது.

இதனால் நீதிமன்றத்தில் பிடியானை பெற்ற பெரம்பலூர் மாவட்ட தனிப்படை போலீசார், முசிறி அருகே உள்ள வடுகபாளையம் கிராமத்தில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த கிருத்திகை வாசனையும், அவனது கூட்டாளியான சுபாஷையும் துப்பாக்கி முனையில், நேற்று மாலை கைது செய்தாக தெறிகிறது. இந்நிலையில், கிருத்திகைவாசனின் மனைவி ஷாலினி, சுபாஷின் மனைவி ரூக் ஷானா பர்வீன் உள்ளிட்ட மூன்று பெண்கள்

கைக்குழந்தையுடன் பெரம்பலூர் காவல் நிலையத்தை நேற்று நள்ளிரவு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் போராட்டத்தின் இடையே மறைத்து வைத்திருந்த பெட்ரோலை கிருத்திகை வாசனின் மனைவி ஷாலினி திடீரென தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்ற நிலையில் அதனை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் டிஎஸ்பி.,பிரபு தலைமையில், சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்து ஆட்டோவில் பாதுகாப்பாக வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்ட ரவுடி கணவன்களுக்கு போலீசார் மாவுக்கட்டோ அல்லது என்கவுண்டரோ செய்து விடுவார்கள் என்ற பயத்தில், அவர்களது மனைவிமார்கள் உள்ளிட்ட மூவர் கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

error: Content is protected !!