Skip to content

ரவுடி வெட்டிக்கொலை- 5 பேருக்கு வலைவீச்சு- திருச்சி அருகே பரபரப்பு..

திருச்சி மாவட்டம் கொள்ளிடம் காவல் நிலைய போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிளிக்கூடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவரை கடந்த 2020 ம் ஆண்டு முன்விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
பிறகு கண்ணனை கொலை செய்ததற்காக பழிக்குப் பழி கொலை செய்ய திட்டமிட்டு இரண்டு வருடங்கள் கழித்து கடந்த 2022 ஆம் ஆண்டு கண்ணனை கொலை செய்த பிரகாஷ்சை சரித்திர பதிவேடு குற்றவாளியான பாண்டியன் மகன் அசோக்குமார் (வயது 40 ) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து உள்ளார்.

இந்த கொலை தொடர்பாக நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளார். தற்பொழுது இந்த வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் கிளிக்கூடு கிராமத்தில் கடந்த 23 ந்தேதி முதல் 26 ந்தேதி வரை பிரகாஷின் நினைவாக அவரது நண்பர்கள் நம்பர் ஒன் பாய்ஸ் குழு என்ற பெயரில் கபாடி போட்டி நடத்தியுள்ளனர். நேற்று இரவு 11 மணி அளவில் சரித்திர பதிவேடு குற்றவாளியான அசோக்குமார் மது போதையில் அரிவாளுடன் அங்கு வந்தார். பிறகு அங்கு இருந்தவர்களிடம் எங்கள் ஊரில் எப்படி கபாடி போட்டி நடத்தலாம் என கேட்டு போதையில் அங்கிருந்த மருதை மகன் சின்ன அப்பு என்கிற பிரகாசை தாக்கியுள்ளார். அப்போது சின்ன அப்பு என்பவரும், கபாடி போட்டியை நடத்திய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணனும், அவரது மகன் பிரவீன் என்கிற சின்னத்தம்பி மற்றும் அவரது நண்பர்கள் என கூறியுள்ளனர்.

இந்த நிலையில் அசோக்குமார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பிரவீன் வீட்டின் முன்பு இரவு 11.30 மணியளவில் அரிவாளுடன் சென்று தகாத வார்த்தையில் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே சின்ன அப்பு என்கிற பிரகாசை தாக்கியதில் கோபத்தில் இருந்த பிரவின், அசோக்குமார் வீடு தேடி வந்து வம்பு இழுத்ததால் பிரவீன் வீட்டில் மறைந்து இருந்த வேலாயுதம் என்கிற பிரபு, பிரவீன் என்கிற சின்னத்தம்பி, சின்னஅப்பு என்கிற பிரகாஷ், மோகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகிய 5 பேரும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் சரித்திர பதிவேடு குற்றவாளி அசோக்குமாரை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தில் அதே இடத்திலேயே அசோக்குமார் பரிதாபமாக இறந்து போனார். இந்தக் கொலையை தடுக்க முயன்ற பொன்னுசாமியின் மகன் புவியரசன் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.  இந்த கொலை குறித்து தகவல் அறிந்த நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அசோக் குமார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம்குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பியோடிய குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.குற்றவாளிகளை பிடிக்க தனி போலீஸ் படை அமைத்து தேடி வருகின்றனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு பிரகாஷ் என்பவரை அசோக்குமார் கொலை செய்துள்ளார். இதற்கு பலி வாங்க வேண்டும் என அவரது நண்பர்கள், உறவினர்கள் காத்திருந்த நிலையில் நேற்று இரவு வீடு தேடி வந்து போதையில் அரிவாளுடன் தகராறு செய்த அசோக்குமாரை இரண்டு வருடங்கள் கழித்து பழிக்கு பழியாக கொலை செய்து உள்ளனர்.
கடந்த 2020 ம் ஆண்டு முதல் இரு கும்பலுக்கு இடையே இரண்டு வருடங்கள் கழித்து மாறி மாறி கொலை செய்து வரும் சம்பவம் அந்த பகுதி மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!