Skip to content

சாராய சாவு….. இறந்தவர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ….. அமைச்சர்கள் வழங்கினர்

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம்  குடித்து 37 பேர் பலியாகி உள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று அமைச்சர்கள், அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தினாா். இதில் சாராயம் குடித்து இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முடிவெடுத்து அறிவித்தார். அதைத்தொடர்ந்து  அமைச்சர்கள் பொன்முடி,  செஞ்சி மஸ்தான் ஆகியோர்  இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவித் தொகை ரூ.10 லட்சத்தி்ற்கான காசோலையை வழங்கினர்.  இறந்தவர்களின் குடும்பம் மிகவும் ஏழ்மை நிலையில் இருப்பதை கருத்தில் கொண்டு முதல்வர் இந்த தொகையை அறிவி்த்துள்ளார். இதை அரசியலாக்க வேண்டாம் என  அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!