பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சியில் இன்று நிருபர்களிடம் கூறியயதாவது:
கோடை விடுமுறைக்கு பின்னர் ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே அறிவித்து உள்ளோம். அப்போது வெயில் எப்படி இருக்கிறது என்பதை பார்த்து, முதல்வரின் கருத்தை அறிந்து பள்ளிகள் திறக்கப்படும் . தனியார் பள்ளிகளில் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.