Skip to content

விஞ்ஞானி நெல்லை முத்து மரணம்-முதல்வர் இரங்கல்

  • by Authour
விஞ்ஞானி, எழுத்தாளா் என பன்முகத்தன்மை கொண்ட, இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு.முத்து திருவனந்தபுரத்தில் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 74.
நெல்லையை பூர்விகமாக கொண்ட விஞ்ஞானி சு.முத்து 1951 மே 10 ம் தேதி பிறந்தவா். இஸ்ரோவின் சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் முதல் நிலை விஞ்ஞானியாக பணியாற்றிய இவா், தன்னுடைய சீரிய சிந்தனையால் பல முறை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவா்களால் பாரட்டப்பெற்றவா். தமிழ் மீது தீரா காதல் கொண்ட நெல்லை சு.முத்து அறிவியல், சிறுவர் இலக்கியம், கவிதை, வரலாறு, மொழிபெயர்ப்பு என 70க்கும் மேற்பட்ட புத்தங்களை எழுதியுள்ளாா்.
 நெல்லை முத்து மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில்  விஞ்ஞானி  நெல்லை முத்துவின் மறைவு ஈடு செய்ய முடியாத  பேரிழப்பு.   அறிவியல், விண்வெளி தொடாபாக ஏராளமான நூல்களை  எழுதி உள்ளார். அவரை  இழந்து வாடும் குடும்பத்துக்கு  ஆறுதல் தெரிவிப்பதாகவும் கூறி உள்ளார்.
error: Content is protected !!