பிரபல இயக்குநர் செல்வராகவன், மனைவி கீதாஞ்சலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இன்ஸ்டாகிராமில் இருந்து புகைப்படங்களை நீக்கியது விவாகரத்து குறித்த வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலையில், செல்வராகவன் தனது எக்ஸ் பக்கத்தில், ‘திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

