திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் பகுதியில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு இதற்கு முன்பு இருந்த கழிவுநீர் கால்வாய் உடைத்துள்ளனர். மேலும் 6 மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த கழிவு நீர் கால்வாய்யை சீர் செய்யப்படாததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வெலக்கல்நத்தம் பகுதியில் இருந்து செட்டேரிடேம் செல்லும் சாலையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்து சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பேசி கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் காரணமாக அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது..
நாட்றம்பள்ளி அருகே 6 மாதத்திற்கு முன்பு தோண்டிய கழிவுநீர் காழ்வாய்.. சாலை மறியல்
- by Authour
