Skip to content

வீண் விவாதங்களை தவிர்ப்போம்- திமுகவினருக்கு முதல்வர் அட்வைஸ்

பெருந்தலைவர் காமராஜர் குறித்து  திருச்சி சிவா எம்.பி. பேசியவை  சர்ச்சைக்கு உள்ளானது. இது குறித்து பல்வேறு கட்சித்தலைவர்கள்  சிவாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில்,  முதல்வர் ஸ்டாலின் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

கலகமூட்டிக் குளிர்காய நினைக்கும் தீயவர்களின் எண்ணத்துக்கு இடம் கொடுக்காதீர்.

பெருந்தலைவரை ‘பச்சைத்தமிழர்” என்று போற்றியவர் தந்தை பெரியார்.

குடியாத்தம் இடைத்தேர்தலில் பெருந்தலைவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த வேண்டாம் என முடிவெடுத்தவர் பேரறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் மறைந்தபோது ஒரு மகன் போல நின்று இறுதி மரியாதை ஏற்பாடுகளைச் செய்து, நினைவகம் அமைத்து, அவரது பிறந்தநாளைக் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர்.

உடல் நலிவுற்ற நிலையிலும் எனது திருமணத்துக்கு நேரில் வந்து பெருந்தலைவர் வாழ்த்தியது என் வாழ்நாளில் கிடைத்தற்கரிய பெரும்பேறு.

பெருந்தமிழர் குறித்துப் பொதுவெளியில் சர்ச்சைக்குரிய விவாதங்கள் நடப்பது சரியல்ல.

தலைவர்களின் மாண்பைக் காக்கும் வகையில்தான் எந்தக் கருத்தும் பகிரப்பட வேண்டும்.

சமூகநீதியையும் மதச்சார்பற்ற நல்லிணக்கத்தையும் உருவாக்க வாழ்நாளெல்லாம் உழைத்த பெருந்தலைவரின் கனவுகளை நிறைவேற்ற அனைவரும் ஒன்று சேர்ந்து உழைப்போம்! வீண் விவாதங்களைத் தவிர்ப்போம்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

error: Content is protected !!