சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டையில் மேகா புளூ மெட்டல் என்ற தனியார் கல்குவாரி இயங்கி வருகிறது. இங்கு எம்.சாண்ட் மணல் தயாரிக்கப்படுகிறது.
அப்போது திடீரென கற்கள் சரிந்து விழுந்தது. இதில் தொழிலாளர்கள் சிக்கினர். 3 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்தனர். இரண்டு பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது. மைக்கேல் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சையில் உள்ளார்.
உயிரிழந்தவர்கள் கணேஷ், முருகானந்தம், ஆறுமுகம், அர்ஜித், ஆண்டிச்சாமி என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.விபத்து பற்றி தகவல்அறிந்த அமைச்சர் முத்துகருப்பன், கலெக்டர் ஆஷா அஜீத், எஸ்.பி. ராவத் ஆகியோர் குவாரிக்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்தவர்களில் ஒருவர் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்.