Skip to content

தஞ்சை வெக்காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்… பக்தர்கள் தரிசனம்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற 50 அடி உயர வெக்காளியம்மன் கோவில் திருவிழா வெக்காளியம்மன் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர் பிள்ளைமார் தெரு அச்சம் தீர்த்த விநாயகர் கோவில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து சுப்பிரமணியர் கோவில் தெரு சால்ட் ஆபீஸ் ரோடு வழியாக சென்று திருக்கோவிலை அடைந்தது பின்னர் வெக்காளியம்மனுக்கு பால் அபிஷேகம் மஞ்சள் அபிஷேகம் திரவிய பொடி அபிஷேகம் என பத்து வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

error: Content is protected !!