Skip to content

கரூரில் சிறப்பு புலனாய்வு குழுவினர் 5-வது நாளாக விசாரணை

கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவின் பேரில் வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க் தலைமையில் இரண்டு எஸ்.பி , 1 ஏடிஎஸ்பி, இரண்டு டிஎஸ்பி, ஐந்து காவல் ஆய்வாளர்கள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

5-வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை தொடங்கியுள்ளது. கரூர் சுற்றுலா மாளிகையில் முகாமிட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவினர் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!