தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், இந்திய கம்யூ. மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அந்த 3 கட்சிகளின் நிர்வாகிகள் சந்தித்தனர். முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது அவர்கள், தமிழகத்தில் ஆணவப்படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினர். ,இதுகுறித்து 3 கட்சித்தலைவர்களும் பத்திரிகையாளர்களிடம் விளக்கினர். இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. அந்த கூட்டத்துக்கு முன் இந்த சந்திப்பு நடந்துள்ளது. எனவே இன்று அமைச்சரவை கூட்டத்தில் இது பற்றி விவாதித்து முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆணவபடுகொலை தடுக்க தனிச்சட்டம் , முதல்வரிடம் கம்யூ, விசிக நேரில் வலியுறுத்தல்
- by Authour
