Skip to content

குளித்தலை அருகே புள்ளிமான் வீட்டிற்குள் தஞ்சம்.. வனத்துறையிடம் ஒப்படைப்பு

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வடசேரி மற்றும் கடவூர் பகுதிகளில் புள்ளிமான்கள் உலாவி வருகின்றன. இந்நிலையில் இன்று அங்கே திரிந்த புள்ளி மானில் சுமார் இரண்டு வயது மதியத்தக்க புள்ளிமான் ஒன்று வழி தவறி மேய்ந்து சிந்தலவாடி ஊராட்சி வீரணம்பட்டி பகுதியில் மேய்ந்து திரிந்த போது அங்கிருந்த தெரு நாய்கள் அதனை கடிக்க துரத்தியுள்ளன.

அப்போது பயந்து மிரண்ட மான் அருகில் இருந்த வீட்டிற்குள் புகுந்து தஞ்சை அடைந்தது. வீட்டின் உரிமையாளரான அரசு போக்குவரத்து ஓட்டுநர்

செல்வகுமார் வன துறையினர் மற்றும் முசிறி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். கொஞ்ச நேரத்தில் சம்பவம் இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர் புள்ளி மானை வலைவீசி பிடித்தனர். பிடிக்கும்போது மானிற்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து கால்நடை மருத்துவர் மொழியரசிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அங்கு வந்து அவர் புள்ளிமானுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் பொதுமக்கள் முன்னிலையில் வனஅலுவலர் ஈஸ்வரி மற்றும் வனவர் சிவரஞ்சனி ஆகியோர் புள்ளிமானை மீட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

error: Content is protected !!