தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இராஜமடம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சந்தான ராஜகோபால சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணி வேலைகள் அனைத்தும் முடிந்து சென்ற 10ம் தேதி யாகசாலை பூஜைகள் துவக்கப்பட்டு இன்று காலை
5ஆம் காலம் பூஜை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவில் வளாகத்தை சுற்றி வந்தது கலசத்திற்கு சிவாச்சியார்கள் பூஜை செய்தனர் பின்னர் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.