அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழா
பகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைரஅபய ஹஸ்தம் சாற்

றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ; திருமார்பில் – ஸ்ரீ ரங்க விமான பதக்கம்; கல் இழைத்த ஒட்டியாணம் ; அதன் கீழே சிகப்பு கல் சூர்ய பதக்கம்: அதன் கீழ் வரிசையாக வெள்ளைகல் அடுக்கு பதக்கங்கள்; காசு மாலை; 8 வட முத்து மாலை, “அரைச் சிவந்த ஆடையின் மேல்” என்ற அமலனாதிபிரான் பாசுரத்திற்கு ஏற்ப சிவப்பு நிற பட்டு அணிந்து பின் சேவையாக – சிகப்புக் கல் பதக்கம்; காசு மாலை ; வைரக்கல் ரங்கூன் அட்டிகை அணிந்து சேவை சாதித்தார்.

