பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி காலை 10:30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்தார். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25 ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு விளையாட்டு கருத்தரங்கு நிறைவு

விழாவில் பங்கேற்கிறார். இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை கல்லூரிக்கு ஆளுநர் வருவதற்கு முன்பு அவசர அவசரமாக அந்த கல்லூரி சாலையில் உள்ள நிமிடத்திற்கு முன்பாக வேகத்தடைகள் அகற்றப்பட்டன.

