நடிகர் ராஜேஷ் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்து விட்டார்.
அவரது உடல் தற்போது சென்னை ராமாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் ராஜேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மதியம் 12 மணி அளவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் கே. என். நேரு ஆகியோர் ராஜேஷ் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். ராஜேஷ் உறவினர்களிடம் துக்கம் விசாரித்தனர். ராஜேஷ் மறைவுக்கு தமிழக கவர்னர் ரவியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ராஜேஷின் மகள் தி்வ்யா அமெரிக்காவில் இருக்கிறார். அவர் வரும் சனிக்கிழமை (31-ந் தேதி) நள்ளிரவில் தான் சென்னை வந்தடைவார் என்று கூறப்படுகிறது. அதனால், நடிகர் ராஜேஷின் இறுதி சடங்கு ஜூன் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.