தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் சாலை ஓர மரங்கள் சூறைக்காற்று அடித்ததால் மரக்கிளைகள் தணிந்து வாகனங்கள் மீது உரசுகிறது. வாகன ஓட்டிகள் மரக்கிளைகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலை துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலை சென்னையிலிருந்து தூத்துக்குடி வரைக்கும் செல்கிறது தூத்துக்குடியில் இருந்து கண்டெய்னர் லாரி மற்றும் உயர்ந்த கனரக வாகனங்கள் அதிராம்பட்டினம் வழியாக மன்னார்குடி திருச்சி தஞ்சாவூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது 2 தினங்களுக்கு முன் அதிவேக சுரைக்காற்று ஒரு மணி நேரம் அடித்ததால் சில மரங்கள் சாய்ந்து விட்டன சில மரங்கள் சாலை ஓரங்களில் சாய்ந்து நிற்கிறது இந்த நிலையில் அதிராம்பட்டினம் நகரப் பகுதியில் இருந்து பட்டுக்கோட்டைக்கு செல்லும் சாலையில் சாலை ஓரங்களில் மரக்கிளைகள் சாய்ந்து வாகனங்கள் மீது உரசி வருகிறது வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஆதலால் நெடுஞ்சாலைத்துறை சம்பவ இடத்தை பார்வையிட்டு மரக்கிளைகளை அகற்றும்படி வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்
அதிராம்பட்டினம்.. சூறைக்காற்று… மரக்கிளைகளால் இடையூறு..அகற்றும்படி கோரிக்கை
- by Authour
