திருச்சி எடமலைப்பட்டி புதூர் கல்லுப்பட்டறை தெருவை சேர்ந்த சிவமுருகன் என்பவரது மகன் தினேஷ்குமார் (17).பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆயத்த நிலையில் இருந்தார்.இந்நிலையில் நேற்று பிற்பகலில் அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் சந்தோசுடன் முக்கொம்பு சுற்றுலா மையத்துக்கு சென்றார். அங்கு இருவரும் காவிரி ஆற்றில் இறங்கி குளித்தனர்.
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற தினேஷ்குமார் தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதுகுறித்த தகவலின் பேரில் திருச்சி தீயணைப்பு படையினர் தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தேடிய நிலையில் வெளிச்சம் இல்லாததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் தீயணைப்பு படையினர் தேடும்பணியை தொடங்கினர். அப்போது மாணவர் தினேஷ் குமாரின் சடலத்தை மீட்டனர். அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.