Skip to content

தற்கொலை நாடகம்- புடவை கழுத்தில் இறுக்கி பெண் பலி… கணவரிடம் விசாரணை

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ராஜம்பேட்டை மண்டலம், போயினபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ். ரயில்வே லோகோ பைலட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பிறகு சிறிது நேரத்தில் சமாதானமாகி விடுவது வழக்கமாம்.

இந்நிலையில் ேநற்று தம்பதி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கிருஷ்ணவேனி கணவரை மிரட்டுவதற்காக கட்டில் மீது நாற்காலியை வைத்து அதன் மீது ஏறி நின்று புடவையால் துக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸ், மனைவியை தடுக்காமல், விளையாட்டாக செல்போனில் வீடியோ எடுத்து கொண்டிருந்தாராம். இதனால் கிருஷ்ணவேணி நாற்காலியில் இருந்து கீழே இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் புடவை அவரது கழுத்தை இறுக்கி கொண்டது. இதில் கிருஷ்ணவேணி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்து உறவினர்கள், போலீசாருக்கு தெரிவித்தனர். அதன்பேரில் ராஜம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து ஸ்ரீராம் ஸ்ரீனிவாஸை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!