Skip to content

ஏடிஜிபி சஸ்பெண்ட்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தமிழக  போலீஸ் ஏடிஜிபி  ஜெயராம்,   எம்.எல்.ஏ.  ஜெகன்மூர்த்தியுடன் சேர்ந்து ஆள் கடத்தலில் ஈடுபட்டதால்  ஏடிஜிபி  ஜெயராம் கைது செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து அவரை  உள்துறை செயலாளர் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து   ஜெயராம் உச்சநீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து நாளை  விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.  அத்துடன் வழக்கு விசாரணையையும் நாளைக்கு ஒத்திவைத்தது.

error: Content is protected !!