Skip to content

மாமல்லபுரத்தில் ஆக.3ம் தேதி அலைசறுக்கு போட்டி

சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 வரை ஆசிய சர்பிங் கூட்​டமைப்பு சார்​பில் 4-வது ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்  போட்டி நடத்​தப்பட உள்​ளது. இந்த போட்​டியை தமிழக அரசு மற்​றும் தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு வாரி​யம் ஆகியவை இணைந்து ரூ.3.30 கோடி செல​வில் நடத்​துகிறது. இந்​தத் தொடரில் இந்​தி​யா, ஜப்​பான், கொரி​யா, குவைத், லெப​னான், சவுதி அரேபி​யா, சீன தைபே, உஸ்​பெகிஸ்​தான், ஐக்​கிய அரபு அமீரகம் உள்​ளிட்ட 20 ஆசிய நாடு​களைச் சேர்ந்த வீரர், வீராங்​க​னை​கள் கலந்து கொள்​கின்​றனர்.

இவர்​கள் ஷார்ட்​போர்டு பிரிவு​களில் போட்​டி​யிடு​வார்​கள். ஓபன் பிரி​வில் ஆடவர், மகளிர், 18 வயதுக்​குட்​பட்ட சிறு​வர், மற்​றும் 18 வயதுக்​குட்​பட்ட சிறுமியர் பிரிவு​களில் போட்​டிகள் நடை​பெறும். வெற்றி பெறு​பவர்​களுக்கு தங்​கம், வெள்​ளி, வெண்​கலம் மற்​றும் தாமிரம் பதக்​கங்​கள் வழங்​கப்​படும். இந்​தத் தொடர் வரும் 2026-ம் ஆண்டு ஜப்​பானில் நடை​பெற உள்ள ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிக்​கான இறுதி தகுதி சுற்று போட்​டி​யாக அமைந்​துள்​ளது. மேலும் ஷார்ட்​போர்டு பிரி​வில் முதலிடம் பெறும் வீரர், வீராங்​கனை இந்த  ஆண்டு நடை​பெற உள்ள உலக அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப் போட்​டிக்கு தகுதி பெறு​வார்​கள்.

ஆசிய அலைச்​சறுக்கு சாம்​பியன்​ஷிப்​பில் பங்​கேற்​கும் இந்​திய அணி​யில் 12 பேர் இடம் பெற்​றுள்​ளனர். இதில் 8 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள் ஆவர்.
தமிழக துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் கலந்து கொண்டு இந்​தத் தொடரில் கலந்து கொள்​ளும் இந்​திய வீரர், வீராங்​க​னை​களுக்கு வாழ்த்து தெரி​வித்​தார். நிகழ்ச்​சி​யில் இந்​திய அலைச்​சறுக்கு சங்​கத்​தின் தலை​வர் அருண் வாசு, தமிழ்​நாடு அலைச்​சறுக்கு சங்​கத்​தின் துணைத்​தலை​வர் வீர​பாகு மற்​றும் எஸ்​டிஏடி அதி​காரி​கள் கலந்து கொண்​டனர்.

 

error: Content is protected !!