Skip to content

திருச்சி அருகே சளி மருந்து குடித்த குழந்தை பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த  கொப்பம்பட்டியை சேர்ந்தவர் குமார்,  இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதியின் மகள்  துர்கா(4) இவருக்கு கடந்த சில நாட்களாக சளி தொந்தரவு இருந்துள்ளது. இதனால்  சங்கீதா  கொப்பம்பட்டியில் உள்ள ஒரு மருந்துக்கடையில் சளி மருந்து வாங்கி வந்து மகள் துர்காவுக்கு கொடுத்துள்ளார்.

மருந்து குடித்த அன்று இரவே துர்காவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்தது.  இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருந்து கடைக்கு சென்று இதுபற்றி கேட்டனர்.  இது குறித்து உப்பிலியபுரம் போலீசிலும் புகார் செய்தனர்.  பின்னர் குழந்தையின் உடலை மீட்டு துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  இது தொடர்பாக தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கடந்த வாரம் உஸ்பெகிஸ்தான் நாட்டில்  இந்திய சளி மருந்தை சாப்பிட்ட 18 குழந்தைகள்  பலியானதை தொடர்ந்து இந்தியாவில் அந்த மருந்து தயாரித்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ள நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்திலும் ஒரு குழந்தை சளி மருந்து குடித்து பலியானது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!