Skip to content

டி20 உலககோப்பை… இந்தியாவின் வெற்றி தொடர்கிறது..

வெஸ்ட் இண்டீசின் நார்த் சவுண்டில் (ஆன்டிகுவா) நேற்று நடந்த ‘டி-20’ உலக கோப்பை ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வங்கதேச அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது. இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா (23) நல்ல துவக்கம் கொடுத்தார். முஸ்தபிஜுர், ரிஷாத் ஹொசைன் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய விராத் கோலி (37) நம்பிக்கை தந்தார். சூர்யகுமார் யாதவ் (6) சோபிக்கவில்லை. ரிஷாப் பன்ட் (36) ஓரளவு கைகொடுத்தார். சாகிப் அல் ஹசன், தன்சிம், ரிஷாத் பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த ஷிவம் துபே, 34 ரன்னில் ஆட்டமிழந்தார். தன்சிம் பந்தை சிக்சருக்கு விளாசிய பாண்ட்யா, முஸ்தபிஜுர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் எட்டினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 196 ரன் எடுத்தது. பாண்ட்யா (50), அக்சர் (3) அவுட்டாகாமல் இருந்தனர். பின்னர் ஆடிய வங்கதேச அணியில்  லிட்டன் தாஸ் (13) ஏமாற்றினார். குல்தீப் யாதவ் ‘சுழலில்’ தன்ஜித் ஹசன் (29), தவ்ஹித் (4), சாகிப் அல் ஹசன் (11) சிக்கினர். கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (40) ஆறுதல் தந்தார். அர்ஷ்தீப் சிங் ‘வேகத்தில்’ ஜாகர் அலி (1), மகமதுல்லா (13) வெளியேறினர். பும்ரா பந்தில் ரிஷாத் ஹசன் (24) அவுட்டானார்.
வங்கதேச அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 146 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. மஹெதி ஹசன் (5), தன்சிம் ஹசன் சாகிப் (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் குல்தீப் 3 விக்கெட் சாய்த்தார். ஆட்ட நாயகன் விருதை ஹர்திக் பாண்ட்யா கைப்பற்றினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!